இரண்டு மாதங்களாக கடிதம் கிடைக்கப்பெறாத கிராம மக்கள்: வெளியான அதிர்ச்சி சம்பவம்
விநியோகத்திற்காக பெற்ற கடிதங்களை மறைத்து வைக்கப்பட்ட அஞ்சல் விநியோகஸ்தர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தளை கோட்டை பகுதியில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் அந்த கிராம மக்களுக்கு சுமார் 2 மாதங்களாக கடிதம் வரவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
அதன்படி செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மாத்தளை பொலிஸாரும் பலகடுவ தபால் மா அதிபரும் இணைந்து இன்று (04) குறித்த பகுதியில் கடிதம் விநியோகம் செய்பவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
அங்கு வழங்கப்படாத சுமார் 1,200 கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கடிதங்களை விநியோகிப்பவரின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“எனக்கு சில கடிதங்கள் அனுப்பப்பட்டன. நான் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை.
அப்போதுஇ அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, இதுபோன்ற கடிதங்கள் வீட்டுக்குள் கொண்டு வந்து எரிக்கப்படுவதாகவும், மற்றவை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதன் பிறகு தகவல் கொடுத்தேன் என குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்த பெண்ணொருவர் தெரிவித்தார்.