டிக் டாக் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

#Court Order
Prathees
2 years ago
டிக் டாக் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிராண்ட்பாஸ் டிக் டாக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

டிக் டாக் டோ சமூக ஊடக வீடியோவைத் தொடர்ந்து கிராண்ட்பாஸ் பகுதியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் 6 பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு  ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்