பணம் இல்லை! அபாயக்கட்டத்தில் இலங்கை
#SriLanka
Prathees
2 years ago
2022ஆம் ஆண்டில் இலங்கை திவாலாகும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய பத்திரிகையான தி கார்டியன் தெரிவித்துள்ளது.
அன்னிய கையிருப்பு வறண்டு கிடப்பதாலும், வரலாறு காணாத பணவீக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஒவ்வொரு நான்கு இலங்கையர்களில் ஒருவர் கூடிய விரைவில் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தமது வருமானத்திற்கான அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பாரிய பொருளாதார சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.