இலங்கையில் மீண்டும் திடீர் மின்தடை ஏற்படும் வாய்ப்பு?

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில்  மீண்டும் திடீர் மின்தடை ஏற்படும் வாய்ப்பு?

மீண்டும் நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இரண்டாவது தடவையாக மூடப்பட்டபோதும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதத்தை பெறுவதில் டொலர் நெருக்கடி காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4