பதவியை துறந்து விட்டு விமர்சியுங்கள்: ஜனதிபதி எச்சரிக்கை

#Gotabaya Rajapaksa #Sri Lanka President
Mayoorikka
2 years ago
பதவியை துறந்து விட்டு விமர்சியுங்கள்: ஜனதிபதி எச்சரிக்கை

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தமது பதவிகளை துறந்துவிட்டு விமர்சிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசுக்குள் இருந்துகொண்டே அரசை விமர்சிப்பதில் நியாயமில்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை உள்ளிருந்துகொண்டே விமர்சிப்போரை பதவிகளில் இருந்து நீக்க முழு அதிகாரமும் தனக்கு உண்டு என்றும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் நிவாரணப் பொதியை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்தபோது, அரசாங்கத்தை பாராட்டாமல் விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதக நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்