இலங்கையில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு விசேட அறிவித்தல்!
#SriLanka
#Covid Vaccine
#Corona Virus
Nila
2 years ago
இலங்கையர்கள் அதிகமானோர் சினோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
சினோபாம் தடுப்பூசி தொடர்பில் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜயசுமன முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் செயல்திறன் 3 மாதங்களில் குறைந்து விடக்கூடியது.
ஏனைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறைய 6 மாதங்கள் வரை நீடிக்கும்.
இந்நிலையில் அதிகமான இலங்கையர்களுக்கு சினோபாம் தடுப்பூசியே செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதனால் 3 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளவர்களை அடிப்படியாக கொண்டே ஒமிக்ரோன் வைரஸ் இலங்கையை எவ்வாறு தாக்கும் என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.