கொழும்பை அச்சுறுத்தும் முதலை- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Colombo
Nila
2 years ago
கொழும்பை அச்சுறுத்தும் முதலை- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தெஹிவளை பிரதேச கடலில் திரிந்த முதலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது வெள்ளவத்தை கடற்பரப்பில் உலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதலையின் தாக்குதலுக்கு இலக்கான 58 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த முதலையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனை பிடிக்குமாறும் தெஹிவளை மக்கள் அதிகாரிகளிடம் கோரியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முதலை வெள்ளவத்தை பகுதியில் உலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனை தெடர்ந்து கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.