இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - மூடப்படும் கடைகள்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - மூடப்படும் கடைகள்!

இலங்கையில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக, நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நட்சத்திர விருந்தகங்களின் உணவு தயாரிப்பாளர்கள் மாற்று வழிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், உணவு தயாரிப்புக்காக விறகு அடுப்பை பயன்படுத்துவது பிரதான மாற்றுவழியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில்சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்