முக்கிய உணவுப் பொருள் ஒன்றிற்காக வரிசையில் நிற்கும் நிலை ஏற்படலாம்!

Mayoorikka
2 years ago
முக்கிய உணவுப் பொருள் ஒன்றிற்காக வரிசையில் நிற்கும் நிலை ஏற்படலாம்!

கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும்.

கோதுமை மா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின் பொது மக்கள் ஒரு இறாத்தல் பாண் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்