விமர்சகர்களுக்கு ஜனாதிபதியின் கடுமையான அறிக்கை
நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
'சுபீட்சத்தின் பார்வை' கொள்கை பிரகடனத்தின் மற்றுமொரு படியாக 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாணவர்களால் தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.
“ஒரு அணியாக பின்னடைவைச் சந்திப்பது கூட்டுப் பொறுப்பு. அப்படி செய்யாமல் குறைகளை மட்டும் குறை கூறினால், அது சம்பந்தப்பட்ட நபரின் திறமையின்மை.
கொவிட் காரணமாக இழந்த இரண்டு வருடங்கள் பற்றி சிந்திக்காமல் அடுத்த மூன்று வருடங்களுக்கு வாக்குறுதியளித்த பொறுப்புகளை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.