எதிர்காலத்தில் பாணுக்கு தட்டுப்பாடு?

#Food
Prathees
2 years ago
எதிர்காலத்தில் பாணுக்கு தட்டுப்பாடு?

எதிர்காலத்தில் பாணுக்கு  தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்குக் காரணம்.

டொலர் பிரச்சனை இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன. நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

தங்களுக்குத் தேவையான டொலர்களில் 10 வீதம்  மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள் என உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலை உயர்வால் பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் தங்களது வேலையை தொடர முடியாமல் போய்விட்டதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.

இதேவேளை, சில்லறை விற்பனை நிலையங்களிலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்