நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்கும் இளைஞர்கள்! கவலைப்படாத அரசாங்கம்: சஜித்

#Sajith Premadasa #Trincomalee
Prathees
2 years ago
நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்கும் இளைஞர்கள்! கவலைப்படாத அரசாங்கம்: சஜித்

இன்று நாட்டின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் இளைஞர்கள் வரிசையில் நின்று நாட்டை விட்டு வெளியேறுவதாகவும், அரசாங்கம் வரிசை யுகத்தையே மரபுரிமையாகக் கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சக்வல நிகழ்ச்சியின் மூன்றாம் கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாசவின் நவீனத்துவக் கருத்தாக்கமாக நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஒரு தலைமுறை குழந்தைகளுக்கு டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி நன்கொடைகள் குறித்த 'சக்வாலா' முன்னோடித் திட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கியுள்ளது.

திருகோணமலை கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு 750,000 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அன்பளிப்பு செய்தார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்