சுசில் நீக்கப்பட்டதாக மஹிந்தவிடம் தெரிவித்த ஷிரந்தி:  சுசிலிடம் வருத்தம் தெரிவித்த மஹிந்த

#Mahinda Rajapaksa
Prathees
2 years ago
சுசில் நீக்கப்பட்டதாக மஹிந்தவிடம் தெரிவித்த ஷிரந்தி:  சுசிலிடம் வருத்தம் தெரிவித்த மஹிந்த

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்தவை நீக்கியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக ஷிரந்தி ராஜபக்ச மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்