அர்ஜென்டினா, ஜிம்பாப்வே, வெனிசுலாவை நோக்கி நகர்கிறது இலங்கை

#Sajith Premadasa
Prathees
2 years ago
அர்ஜென்டினா, ஜிம்பாப்வே, வெனிசுலாவை நோக்கி  நகர்கிறது இலங்கை

பணம் அச்சடிக்கப்பட்டாலும் பணவீக்கம் அதிகரிக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா, சிம்பாப்வே, வெனிசுவேலா ஆகிய நாடுகளை நோக்கி நாட்டைத் தள்ளவே மத்திய வங்கி ஆளுநர் செயற்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளால் நாடு அழிவை நோக்கிச் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட 'ஒருங்கிணைந்த மக்கள் சக்தியின் மூச்சு' வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட 'ஜன சுவய'  வேலைத்திட்டத்தின் 35வது படியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் (ரூ. 2,457,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்