100 ஏக்கர் அரச காணிகளை பகிர்ந்தளித்தார் அமைச்சர் மஹிந்தானந்த
#SriLanka
Prathees
2 years ago
ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான நாவலப்பிட்டியில் உள்ள 100 ஏக்கர் பொஹில் தோட்டத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தோட்டத்திலுள்ள 100 இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
அந்த 100 ஏக்கர் நிலத்தில் கரிம உரங்களைப் பயன்படுத்தி மஞ்சள்இ பழங்கள்இ வல்லாரை உள்ளிட்ட பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பொஹில் தோட்ட இளைஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து எதிர்காலத்தில் பெரும் வருமானத்தை ஈட்ட முடியும்.
அந்த நிலங்களில் விளையும் அனைத்து பயிர்களுக்கும் தொழில்நுட்ப அறிவு உள்ளிட்ட அனைத்து ஆலோசனைகளையும் வேளாண் துறை வழங்க உள்ளது.