எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் புலனாய்வுப் பிரிவினர்
அரசாங்க அமைச்சர்களுக்குப் பின்னால் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பெரும் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த திரு.சுசில் பிரேமஜயந்த, அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பின்னால் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்படுவதும், பின்வரிசை எம்பி ஒருவருக்கு இவ்வாறான தகவல் கிடைத்துள்ளமையும் அனைவரும் அவதானிக்க வேண்டிய விடயம் எனத் தெரிவித்தார்.