ஓமிக்ரோனால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முதல் பெண்ணுக்கு அபராதம்

#Omicron
Prathees
2 years ago
ஓமிக்ரோனால்  பாதிக்கப்பட்ட இலங்கையின் முதல் பெண்ணுக்கு அபராதம்

ஓமிக்ரோன் நோயால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முதல் பெண்ணுக்கு  நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. 

ஓமிக்ரோன் தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டதாக  கண்டறியப்பட்ட மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த  பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் மாரவில நீதிமன்றம்   12,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

கோவிட் தொற்றுக்குள்ளானதை வெளிப்படுத்தாத காரணத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் நவம்பர் 24ஆம்  திகதி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்த நாட்டிற்கு வந்திருந்தார்.

அவர்கள்  கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்