பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நபர் உயிரிழப்பு
#Death
Prasu
2 years ago
திருகோணமலை புல்மோட்டை வீதியில் யான் ஓயா பகுதியில் பல குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்ய குச்சவெளி பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில், பொலிசாரிடம் இருந்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
பின்னர் யான் ஓயாவிற்கு அருகில் உள்ள சிறிய நீர்நிலையொன்றில் இருந்து குறித்த நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (08) சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்றதுடன், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பிரேத பரிசோதனை அறிக்கையை உயிரிழந்தவரின் உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.