உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு உண்டாவதற்கு....

#Health
உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு உண்டாவதற்கு....

தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் அல்லது இன்னும் நீண்ட நேரத்துக்கு வேலை இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு Power nap ஒரு நல்ல ஐடியா. அதாவது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் குட்டித்தூக்கம். தூக்கம் என்றவுடன் படுக்கை, தலையணை என்று சகல வசதிகளையும் யோசிக்க வேண்டாம்.

வேலை நேரத்துக்கிடையே சுமார் 15 நிமிடங்கள் வரை கண்களை மூடி அமைதியாக இருந்தாலே போதும். முடிந்தால் கண் இமைகள் மேல்ஈரத் துணியையோ தண்ணீரில் நனைத்த பஞ்சையோ 15 நிமிடம் வைத்துவிட்டு எடுத்துப் பாருங்கள்.

அத்தனை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.  இன்று கணிப்பொறியில் வேலை பார்ப்பது அதிகமாகிவிட்டது. மொபைல் பயன்பாடு பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. அதனால் சோர்வடையும் கண்களுக்கும் பவர் நாப் நல்ல பலன் தரும்!

மேலும் ஆரோக்கிய தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.