நாட்டில் வெகுவாக குறைவடையும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்
Prabha Praneetha
2 years ago
மத்திய மலைநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 155 அடியாக இருந்ததுடன், 13ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 144.2 அடியாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 120 அடியாகக் காணப்பட்டதுடன், 13ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 85.9 அடியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.