ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் மரணம்

#Death
Prathees
4 years ago
ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் மரணம்

ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்ற ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாவலப்பிட்டியை சேர்ந்த 75 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்திருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அப்போது பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுஇ அவரை உடனடியாக கீழே இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

நல்லதண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4