திருமண நிகழ்வின்போது மாமாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த  மருமகன் 

Prathees
2 years ago
திருமண நிகழ்வின்போது மாமாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த  மருமகன் 

திருமண விருந்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

திஸ்ஸமஹாராம, விராஹெல பிரதேசத்தில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமண நிகழ்வொன்றின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவர் நேற்று (16) மனைவியின் தந்தையை அடித்துக் கொன்றுள்ளார்.

உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, பதவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்