மூன்று பிள்ளைகளின் தாய் நீரில் மூழ்கி பலி
#Death
Prathees
2 years ago
கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் உல்லாசமாக இருக்க சென்ற இளம் மனைவி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற போதே குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.