ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கடுமையாக தண்டிப்போம் - சஜித்

Prathees
4 years ago
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கடுமையாக தண்டிப்போம் - சஜித்

தன்னுடைய அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமகி ஜன பலவேகவின் மஸ்கெலியா உறுப்பினர்களின் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உண்மையைத் தேடுமாறு பாதுகாப்புப் படையினரிடம் கார்டினல் கூறுகிறார்.

இன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை இந்த அரசாங்கத்தால் பிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தால் கத்தோலிக்க சமூகத்தினர் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது அவநம்பிக்கையை உருவாக்குகிறது. இது நல்ல விஷயமா? வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.

ஒற்றுமை அரசாங்கத்தில், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க முயற்சிப்போம் என இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4