இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மற்றுமொரு அபாய நோய்!
#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவிக்கின்றார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும், ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள் என அவர் கூறுகின்றார்.
யாழ்ப்பாணம், கம்பஹா, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்தே, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மலேரியா பரவல் குறித்து மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர கருத்து வெளியிட்டார்