பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய இருவர்  கைது

Prathees
2 years ago
பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய இருவர்  கைது

அம்பாறை- உஹன பிரதேசத்தில் பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உஹன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உஹன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்