கொழும்பு துறைமுக நகரத்தைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்

#Colombo
Prathees
2 years ago
கொழும்பு துறைமுக நகரத்தைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்

ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா மண்டலம் மறுநாள் முதல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள நுழைவு வாயில் திறக்கப்படுவதற்கு முன்னரே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த 7 நாட்களில் மட்டும் 20,000க்கும் அதிகமானோர் கொழும்பு துறைமுக நகர வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார விடுமுறை என்பதால் மதியம் மெரினா பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்வதை காண முடிந்தது.

இதன்படி, பொதுமக்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பு துறைமுக நகரின் மெரினா வலயத்திற்குள் பிரவேசித்து வளாகத்தை பார்வையிட வாய்ப்பு உள்ளது.
 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்