கொழும்பு துறைமுக நகரத்தைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்

#Colombo
Prathees
4 years ago
கொழும்பு துறைமுக நகரத்தைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்

ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா மண்டலம் மறுநாள் முதல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள நுழைவு வாயில் திறக்கப்படுவதற்கு முன்னரே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த 7 நாட்களில் மட்டும் 20,000க்கும் அதிகமானோர் கொழும்பு துறைமுக நகர வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார விடுமுறை என்பதால் மதியம் மெரினா பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்வதை காண முடிந்தது.

இதன்படி, பொதுமக்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பு துறைமுக நகரின் மெரினா வலயத்திற்குள் பிரவேசித்து வளாகத்தை பார்வையிட வாய்ப்பு உள்ளது.
 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4