ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை மதிக்காத உயர் அதிகாரிகள்! - அமைச்சர் குற்றச்சாட்டு
Prabha Praneetha
2 years ago
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு சுசந்த பெரேராவை நியமித்தமைக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மரபுகளை மீறி தகுதி குறைந்த ஒருவர் பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு இந்த நியமனமே பிரதான ஏது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.