தேவாலயத்தில் கைக்குண்டு சம்பவம்: மற்றொரு சந்தேக நபர் கைது

Prathees
2 years ago
தேவாலயத்தில் கைக்குண்டு சம்பவம்: மற்றொரு சந்தேக நபர் கைது

பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11ம் திகதி  மாலை 4.40 மணியளவில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தின் சிலைக்கு அருகாமையில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிபத்து ஏற்பட்டால் வெடிக்கும் வகையில் செலோபேன்இ தீப்பெட்டிகள் மற்றும் தூபக் குச்சிகளைப் பயன்படுத்தி இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.