இலங்கைக்கான விமான சேவையை நிறுத்திய குவைத் ஏர்வேஸ்
Prathees
2 years ago
குவைத் எயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை அடுத்த வாரம் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளுர் நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொடர்புடைய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே இதற்கு காரணம் என அந்த ஊடக அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, வாரத்திற்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டது.
மேற்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கையில் இருந்து இந்த விமான சேவை இயங்குகிறது.