எரிபொருள் கொள்வனவுக்கு 32 மில்லியன் டொலர் செலுத்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Prathees
2 years ago
எரிபொருள் கொள்வனவுக்கு 32 மில்லியன் டொலர் செலுத்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
எரிசக்தி துறையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பாதிக்காது என விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சானக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு வைத்துள்ளது.
கடந்த வாரம், எரிபொருள் எதிர்காலத்தில் வாங்குவதற்கு 32 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பும் ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் உள்ளது.
இதன்படிஇ ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஒருபோதும் இடையூறு ஏற்படாத வகையில் தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.