பாடசாலை மாணவனை தாக்கிய தந்தையும் மகனும்
#Police
Prathees
2 years ago
களுத்துறையில் வீதியில் வைத்து தந்தையும் மகனும் இணைந்து பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கியுள்ளனர்.
பாடசாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை மத்திய சந்தியில் நேற்று முன்தினத் (19) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஒரு மாணவர் தனது தந்தையுடன் வந்து மற்ற மாணவனை தனது வீட்டிற்கு அருகிலுள்ள சாலையில் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை பொலிசார் கைது செய்துள்ளதாகவும்,தாக்குதலில் காயமடைந்த மாணவன் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.