மூன்றுகோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிகளை விற்பனை செய்ய முயற்சி

#Arrest
Prathees
4 years ago
மூன்றுகோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிகளை விற்பனை செய்ய முயற்சி

மொனராகலை மஹாநாம வீதியிலுள்ள தனியார் விடுமுறை விடுதியில் 30 மில்லியன் ரூபாவிற்கு இரண்டு வலம்புரிகளை விற்பனைக்காக கொண்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் மொனராகலை பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலம்புரியை கொள்வனவு செய்யும் மொனராகலையைச் சேர்ந்த வர்த்தகர் மொனராகலை மஹாநாம வீதியிலுள்ள தனியார் விடுமுறை விடுதியில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் குறித்த விடுதியில்  ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர்.


இன்று காலை காரில் உரிமையாளர்கள் வலம்புரி சங்குடன்  விடுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4