அரசாங்கத்தின் மற்றுமொரு தோல்வி

Prabha Praneetha
2 years ago
அரசாங்கத்தின் மற்றுமொரு தோல்வி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வசமிருந்த லாஹுகல பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பிளவு காரணமாக இவ்வாறு குறித்த பிரதேச சபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்திருந்தமை விசேட அம்சமாகும்.