கொழும்பை முடக்க தயாராகும் ஆசிரியர்கள்?

#SriLanka
Nila
2 years ago
கொழும்பை  முடக்க தயாராகும் ஆசிரியர்கள்?

கொழும்பில் நாளை (24) காலை பாரிய போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்ட காலமாக நியமனம் வழங்கப்படாமையை கண்டிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.


 அத்துடன், மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக, இந்த நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.


மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 300ற்கும் அதிக ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ள போதிலும், இந்த நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறான நிலையில், குறித்த ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடி நியமனத்தை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.