பொலிஸாருடன் கலவரத்தில் ஈடுபட்ட குழுவினர்

Prathees
4 years ago
பொலிஸாருடன் கலவரத்தில் ஈடுபட்ட குழுவினர்

மாத்தறை, மிதிகம பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற  பிரதேசவாசிகள் குழுவொன்று இன்று (23)  வன்முறையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை, மிதிகம என்ற துருக்கி கிராமத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்  அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் நேற்று முன்தினம் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்தது அநியாயம் எனக்கூறி அவரது உறவினர்கள்  பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அருகிலுள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்த வந்து ஐந்து பேரை மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4