வெலிகம கடலில் காணாமல் போன இரண்டு மாணவிகள்
Prathees
2 years ago
வெலிகம கடலில் இன்று நீராடச் சென்ற ஐந்து பாடசாலை மாணவிகளில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஏனைய மூவரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவிகள் இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.