இலங்கையில் மின்சாரத்தை சேமிக்க தெருவிளக்குகள் அணைக்கப்படுமா ?
#SriLanka
Nila
2 years ago
மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கையாக வீதி விளக்குகளை அணைக்கும் யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று அமைச்சரவை கூடும் போது மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை தெரு விளக்குகளை அணைத்துவிட்டு இரவு 11 மணிக்குப் பிறகு விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் அல்லது மாலை 6.30 முதல் 10 மணி வரை தெரு விளக்குகளை அணைத்து இரவு 10 மணிக்குப் பிறகு விளக்குகளைஒளிரச் செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படும் என்று அமைச்சர் லொகுகே கூறினார்.