புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த தீர்மானம்

Prabha Praneetha
2 years ago
புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த தீர்மானம்

நேற்று  இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறிப்பிட்ட சில பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எந்தவொரு மாணவருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாகொட ரோயல் கல்லூரி, வெலிமட விஜய ஆரம்பக் கல்லூரி, யூ.பி. வன்னிநாயக்க கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் இருந்து குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.