திடீரென இடிந்து விழுந்த பாலம்

Nila
2 years ago
திடீரென இடிந்து விழுந்த பாலம்

டிப்பர் ரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்த போது தெனியாய, மெதிரிபிட்டிய பொத்தான பாலம் இன்று (24) பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, ​​மிதக்கும் மரக்கட்டை ஒன்று பாலத்தின் துணை தூண் ஒன்றில் மோதியதில்  பாலத்தின் ஒர பக்கம்  சேதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதால் மெதிரிபிட்டிய பாடசாலை மற்றும் பல கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.