முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களைக் கண்டறியும் ஆப்ஸ்

Prathees
2 years ago
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களைக் கண்டறியும் ஆப்ஸ்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை அடையாளம் காண மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்த அரசு தயாராகி வருகிறது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

இந்த கையடக்க செயலியை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  தெரிவித்தார்.

"மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்களே முழுமையான தடுப்பூசி பெற்றவர்களாக வரையறுக்கப்படுகிறது.

அதற்கான பயன்பாட்டையும் ஞசு குறியீட்டையும் உருவாக்க தொழில்நுட்ப அமைச்சகத்தின் குழுவை நாங்கள் நியமித்துள்ளோம்.

அது கிடைத்தவுடன், அந்தச் சட்டத்தை இயற்றுவோம், அல்லது வர்த்தமானியில் வெளியிடுவோம் அல்லது நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டு வருவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.