முதலமைச்சர் பதவிக்கு அடிபடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Mayoorikka
4 years ago
முதலமைச்சர் பதவிக்கு அடிபடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாகாண சபைத் தேர்லில் எவ்வாறு போட்டியிட முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் போட்டிகள் ஏற்பட்டுள்ளதாகவம் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் அவர்கள் 13 ஆவது திருத்தத்தை எதிர்ப்பது விநோதமானது என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மாகாண சபை முறை வேண்டாம் என்பவர்கள் அதற்கான மாற்று வழிகளை அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4