தனியார் மின் உற்பத்தி நிலையத்துக்கு பூட்டு
Mayoorikka
2 years ago
களனிதிஸ்ஸவிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் தேசிய மின் உற்பத்திக்கு இதனால் சுமார் 160 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
எவ்வாறாயினும் மின்சார நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அனல்மின் நிலையத்தை மூட முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு, மின் உற்பத்தி நிலையத்துக்கு இன்று விஜயம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.