பூஸ்டர் தடுப்பூசி பெறாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. அது மிகவும் வேகமாக பரவக்கூடியதென சுகாதார பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது. இதனால் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
நேற்று 30,253 பைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.