இலங்கை மக்களுடனான உறவுகள் தொடரும்! இந்தியா
Mayoorikka
2 years ago
இந்திய இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதவில் பிரதமர் ராஜபக்ஷவுக்கு நன்றி. நமது இரு நாடுகளும் சுதந்திரத்தின் 75 ஆண்டு மைல்கல்லை கொண்டாடும் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது. நம் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும்
வலுப்பெறட்டும் என்று தெரிவித்திருந்தார்.