இலங்கை அழகுக்கலை நிபுணர்களுக்கு லண்டனில் வாய்ப்பு
Mayoorikka
2 years ago
லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிதொடர்வதற்கான வாய்ப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அழகுத்துறையுடன் தொடர்புடைய 4 பிரிவுகளின் கீழ் தொடர முடியும் என்றும், பிரித்தானிய விரிவுரையாளர்களிடம் சிங்களமொழிபெயர்ப்பு மூலமான விரிவுரைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.