அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளை சந்தித்த அஸாத் சாலி

Mayoorikka
2 years ago
அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளை சந்தித்த அஸாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னால் ஆளுநருமான அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து அஸாத் சாலி அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.