தெஹிவளையில் வாடகை கட்டிடத்தில் விபச்சார விடுதி : 10 பெண்கள் கைது!
Prathees
2 years ago
தெஹிவளை அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியில் முகாமையாளர் உட்பட 10 பெண்கள் கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 24ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
விடுதியின் முகாமையாளர் 60 வயதுடைய கந்தானையைச் சேர்ந்தவர். எனவும் 27, 32, 33, 41, 42 மற்றும் 52 வயதுடைய பெண்கள், ஓபநாயக்க, கொகருல்ல, அத்திடிய, களனி, பிலியந்தலை, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களைச் சேர்ந்த திருமணமானவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபச்சார விடுதி நடத்தப்பட்ட கட்டிடம் மாதம் 350,000 ரூபா வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.