தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிவித்தல்

Mayoorikka
4 years ago
தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிவித்தல்

கொவிட் தொற்று தொடர்பிலான தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் மருந்து அருந்தாமல், காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், குறித்த நபரை 7 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் கொவிட் நோயாளர்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் அல்லது ரெபிட் அன்டீஜன் பரிசோதனை மேற்கொண்டு 7 நாட்களுக்குள், இறுதி 48 மணித்தியாலங்களில் எந்தவித மருந்தும் அருந்தாது காய்ச்சல் நிலைமையோ அல்லது கொவிட் அறிகுறிகளோ இல்லை என்றால், குறித்த நபரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4