17 வயது சிறுமியை காட்டிற்கு அழைத்துச் சென்றவரை மரத்தில் கட்டி வைத்த கிராமமக்கள்.

Prathees
2 years ago
17 வயது சிறுமியை காட்டிற்கு அழைத்துச் சென்றவரை மரத்தில் கட்டி வைத்த கிராமமக்கள்.

பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ற நபரை  அப்பகுதி மக்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

திஸ்ஸமஹாராம ஏகமுத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உதவி கோரி கூச்சலிட்டதால் அந்த பகுதிளைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து  அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

“நானும் என் கணவரும் வேலைக்குச் சென்றபோது இதுதான் நடந்துள்ளது. அண்மையில்  எங்கள் வீட்டில் கல்லெறியப்பட்டது. ஆனால் நாங்கள் காவல்துறைக்கு செல்லவில்லை என 17 வயது சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.